Sunday, March 13, 2016

பஞ்சதள கோபுரம் அமைத்தல் உள்ளடங்கலாக பாரியளவிலான திருத்த மற்றும் திருப்பணி வேலைகள்

இம்முறை ஆலயத்தில் பஞ்சதள கோபுரம் அமைத்தல் உள்ளடங்கலாக பாரியளவிலான திருத்த மற்றும் திருப்பணி வேலைகள் இடம்பெறவுள்ளது. எம்பெருமானின் திருவருளினால் அடியவர்கள் பலர் தாமாகவே முன்வந்து பல திருப்பணிகளை செய்வதாக தெரிவித்துள்ளார்கள்.
ஆனாலும் பகுதியளவிலான திருப்பணி வேலைகளுக்காக அடியவர்களினதும், அன்பர்களினதும் பங்களிப்பினை ஆலய பரிபாலன சபையினர் எதிர்பார்க்கின்றனர்.
திருப்பணியில் அன்பர்கள் மற்றும் அடியவர்களை இணைந்து செயற்படுமாறு வேண்டிக் கொள்கிறோம்.
பரிபாலனசபை மேலதிக தொடர்புகளுக்கு: 0772834558

சித்தன்கேணி பெரியவளவு ஸ்ரீ மஹாகணபதிப்பிள்ளையார் ஆலய பாலஸ்தாபன கும்பாபிசேகம்

யாழ்ப்பாணம் – சித்தன்கேணி பெரியவளவு ஸ்ரீ மஹாகணபதிப்பிள்ளையார் ஆலயம் பல திருப்பணிகள் செய்து புதுப்பொலிவு காண இருப்பதால் நிகழும் மங்களகரமான மன்மதவாண்டு பங்குனித் திங்கள் 05ம் நாள் (18-03-2016) வெள்ளிக்கிழமை காலை 7.00 மணிமுதல் 7.45 மணிவரையுள்ள சுபபுண்ணிய வேளையில் பாலஸ்தாபன கும்பாபிசேகம் நடைபெறவுள்ளது.


Monday, January 25, 2016

சிவஸ்ரீ லம்பொதர குமாரசரமிக்குருக்கள் அவர்களின் உள்ளத்தில் இருந்து ஓர் அழைப்பு...

சித்தன்கேணி மகா கணபதிப்பிள்ளையார் கோயில் யாழ்ப்பாணத்தின் மேற்குப்பக்கமாக அமைந்துள்ள சித்தர்கள் வாழ்ந்த நகராம் சித்தன்கேணியிலே, யாழ்ப்பாணம் சங்கானை பொன்னாலை பிரதான வீதியும் கீரிமலை பண்டத்தரிப்பு அராலி பிரதான வீதியும் சந்திக்கும் நாற்சந்தியிலே பெரியவளவு என்னும் பதியிலே ஶ்ரீ மஹா கணபதி பிள்ளையார் கோயில் அமைந்திருக்கின்றது. இக்கோயில் அமைந்துள்ள பெரியவளவு என்னும் இடம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை சோலையாக விளங்கியது. அச்சோலையில் ஒரு விருட்சத்தின் கீழ் இருந்து விநாயகப்பெருமான் அனைத்து ஜீவராசிகளுக்கும் அருள்பாலித்து வந்தார். பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் விநாயகப்பெருமானுக்கு ஒரு ஆலயம் அமைக்கப்பெற்று சைவ ஆகம முறைப்படி பூசைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டது. பின்னர் 1898 இல் இக்கோவிலின் முக்கிய பகுதிகள் கருங்கற்களால் விசாலமாக கட்டுவிக்கப்பட்டது. பின்னர் 1912 இல் மஹா கும்பாவிஷேகப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. சைவ ஆகம விதிப்படி பூசைகள் ஆரம்பித்த காலத்தில் இருந்து பிராமணக் குருமார் இக் கோவில் பூசைகள் செய்து வருகின்றார்கள். திரு ஐயாமுத்து ஐயர் அவர்களே இக்கோவிலின் முதற் பூசகர் ஆவார்கள். அவருடைய குடும்பத்தினரே பல காலம் தொடர்ந்து பூசை செய்தனர். சிவஸ்ரீ குமாரசாமிக் குருக்கள் அவர்கள் இக்கோவிலின் பூசைகளைப் பொறுப்பேற்றபின்னர் இக்கோவில் பல சிறப்புக்களை பெற்றது. அடியார்களின் பங்களிப்புடன், இந்தியாவில் இருந்து சிற்பாச்சரியர்களை வரவழைத்து தமிழ்நாட்டில் கோவில்களில் உள்ளதுபோல் சமயம் தொடர்பான ஓவியங்களையும் சிற்ப்பங்களையும் கோவிற் சுவர்களிலும் தூண்களிலும் அமைக்கச்செய்தார். விநாயகர் புராணத்தில் உள்ள பல கதைகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள் இக்கோவிலின் மண்டபத்தின் இரு பக்கங்களிலும் வரையப்பட்டுள்ளன. அத்துடன் நாயன்மார்கள் நால்வரினதும் மும்மூர்த்திகளினதும், விநாயகப்பெருமான் முருகப்பெருமான், கண்ணபிரான், இராமபிரான், சூரியன், சந்திரன் ஆகியோருடைய சிற்பபங்களும் சிலை வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் அனைத்து இந்துக்குருமாரும் வியக்கும் வண்ணம் முதன் முதலாக முப்பத்து மூன்று ஓம குண்டங்கள் அமைத்து 1958 இல் மஹா கும்பாவிஷேகம் நடாத்தி இக் கோவிலுக்குப் பெருமை சேர்த்தார்.அந்த பரம்பரை குரு வழியில் அவரது ஒரேமகளாகிய திருமதி ஜெகதீஸ்வரி அம்மா (பாப்பா அம்மா)வின் பிள்ளைகள் கும்பாபிஷேககுரு மற்றும்திருவிழா குருக்களாக அடியேன் லம்போதரக்குருக்கள் மற்றும் எனது சகோதரர்கள ஷண்முகப்பிரத குருக்கள மதுசூதனக்குருக்கள் இறைபணியை நிறைவேற்றிவருகிறோம் மூலமூர்த்தியாகிய விநாயகப்பெருமானுடன் முருகப்பெருமான், வைரவர், சனீஸ்வரர், சண்டேஸ்வரர் ஆகியோரும் வடக்குப் பக்கத்தில் உள்ள பூந்தோட்டத்தில் கைலாசநாதரும் நித்தியா கல்யாணி அம்பாளும், அத்துடன் வடகிழக்கு மூலையில் நாகதம்பிரானும் தென் கிழக்குப் பக்கத்தில் கடம்பமர முருகனும் இருந்து எமக்கெல்லாம் அருள்பாலிக்கின்றார்கள். இந்த கோவிலிலே பெரிய அளவிலான சிவலிங்கமும் அம்பாள் விக்கிரகமும் அமைந்துள்ளன. இவ்வாலயத்தே ஐந்து காலப் பூசைகள் தினமும் நடைபெறுகின்றன. வைகாசி மாதத்தில் மகோற்சவம் நடைபெற்று வைகாசிமாதப் பௌர்ணமிக்குத் தீர்த்தம் நடைபெறும். அத்துடன் மாதப்பிறப்பு அபிஷேகம், மாதாந்த சதுர்த்தி, சங்கடகர சதுர்த்தி, விநாயகர் நோன்பு, கந்தசஸ்டி, நவராத்திரி, சிவராத்திரி, திருவெம்பாவை, ஆகிய திருவிழாக்களும் சிறப்பாக நடைபெறுகின்றன. பன்னின்ரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மஹாகும்பாவிஷேகம் நடைபெறுகின்றது. தற்போளுது பாரிய திருப்பணி நடைபெற உள்ளது ஊர்மக்கள் தங்கள் பங்களிப்பை செய்ய பரமபரை குரு வின் வேண்டுகோழ் எல்லோரும் மாகா கணபதிப்பிள்ளையாரின் அருள் பெற்று உய்வோமாக!


இறைபணியில் சித்தன்கேணி மகா கணபதிப்பிள்ளையார் கோயில் பரம்பரை குரு சிவஸ்ரீ லம்பொதர குமாரசரமிக்குருக்கள்.

Thursday, January 21, 2016

எம்பெருமான் ஆலய திருப்பணியில் அனைவரையும் இணைத்தல்.

சித்தன்கேணி பெரியவளவு ஸ்ரீ மகா கணபதிப்பிள்ளையார் ஆலய பரிபாலனசபையினராகிய நாம் எம்பெருமானின் திருப்பணியில் அனைவரையும் ஒன்றிணைத்து செல்ல விரும்புகின்றோம். இருப்பினும் எம்பெருமானின் அடியவர்கள் இலங்கையின் பலபாகங்களிலும் மற்றும் வெளிநாடுகளிலும் வசித்து வருகின்றனர். எல்லோரையும் நேரடியாக தொலைபேசி (phone) மூலமாகவோ அல்லது தபால் (mail) மூலமாகவோ தொடர்புகொள்ள நாங்கள் சித்தமாக உள்ளோம். இருப்பினும் அனைவரினதும் முகவரிகள் (address) மற்றும் தொலைபேசி இலக்கங்களைப் (telephone numbers) பெறுவதில் சிரமம் காணப்படுகின்றது. அன்பர்களே தாங்கள் தங்களுடைய மற்றும் தங்களுக்கு தெரிந்த எம்பெருமான் அடியவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்களை கீழ்காணும் முகநூல் பக்கத்தினூடாகவோ (facebook group) தனிப்பட்ட செய்தியாக அனுப்பின் அது எமக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்பதனை தாழ்மையுடன் அறியத்தருகின்றோம்.


ஆலய பரிபாலனசபைத் தலைவர் மற்றும் செயலாளரினை நேரடியாகத் தொடர்புகொள்ள விரும்புபவர்கள் கீழ் காணும் தொலைபேசி இலக்கத்தினூடாகவும் தொடர்புகொள்ள முடியும்என்பதனையும் அறியத்தருகின்றோம்.
1. பூ. சிவகுமரன் (தலைவர், பரிபாலனசபை) - 0778063623
2. வே. பரந்தாமன் (செயலாளர், பரிபாலனசபை) - 0772834558

Saturday, January 16, 2016

சித்தன்கேணி பெரியவளவு ஸ்ரீ மகா கணபதிப்பிள்ளையார் கோவில் புனருத்தாரண திருப்பணி நிதிக்கான விண்ணப்பம்.

விநாயகப் பெருமான் அடியார்கள் அனைவரையும் எம்முடன் கைகோர்ப்பதன் மூலம் எம்பெருமானின் திருப்பணியில் தங்களையும் இணைத்து எல்லாம்வல்ல விநாயகப்பெருமானின் அருட்கடாட்சத்திற்கு பாத்திரமாகுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.

மேலதிக தொடர்புகளுக்கு: 
1. பூ. சிவகுமரன் (தலைவர், பரிபாலனசபை) - 0778063623
2. வே. பரந்தாமன் (செயலாளர், பரிபாலனசபை) - 0772834558

Friday, January 15, 2016

சித்தன்கேணி மகாகணபதிப் பிள்ளையார் ஆலய தற்போதைய நிலையும் புனருத்தாரணத்திற்கான தேவைப்பாடும்.

சித்தர்கள் வசித்து போற்றி வழிபட்ட புராதன மகிமை பெற்ற தலமான எமது சித்தன்கேணி மஹா கணபதிப்பிள்ளையார் ஆலயம் கடந்த கால அனர்த்தங்களின் பின்பு புருத்தாரணம் செய்யப்பட வேண்டியுள்ளது.
நூறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமை வாய்ந்த இராஜகோபுரம் உடைந்து விழும் தறுவாயில் உள்ளது. இவ்விராஜகோபுரத்தின் தற்போதைய நிலையை இங்கு காண்க. எனவே இராஜகோபுரம் புதிதாக நிர்மாணிக்கப்பட வேண்டிய தேவையுள்ளது.




ஆலய கருவறையின் (மூலஸ்தானம்) தற்போதையநிலை. விரிசல்கள் ஏற்பட்டுள்ளதுடன் வர்ணப்பூச்சுகள் தீட்டப்படவேண்டிய நிலையிலுள்ளது.



தெற்குப்புற எழுந்தருளி மண்டபம். எழுந்தருளி விநாயகர் (ஐம்முகவிநாயகர் உட்பட) மற்றும் எழுந்தருளி முருகன் (ஆறுமுக சுவாமி) ஆகியோர் ஒரே அறையில் வீற்றுள்ளனர். எழுந்தருளிமண்டபமானது ஆகம விதிப்படி சில மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும் என தலைசிறந்த சிவாச்சாரியார்களினால் விதந்துரைக்கப்பட்டது.
நித்தியகல்யாணி சமேத கைலாசநாதர் உறையும் பரிவாரங்களின் தற்போதைய நிலை.

ஆலய வசந்த மண்டபம்.
வள்ளி தெய்வயானை சமேத சண்முகப்பெருமான் ஆலய தற்போதைய தோற்றம்.


சனீஸ்வரன் ஆலயத்தின் தற்போதைய தோற்றம்.
சண்டேசுவரர் ஆலயத்தின் தற்போதைய தோற்றம்.
ஆலய உட்புற சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதுடன் சுவர்களில் வரையப்பட்டுள்ள ஓவியங்களின் வர்ணப்பூச்சுக்கள் பொலிவிழந்து காணப்படுகின்றது.


ஆலய கூரையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதன் காரணமாக மழைநேரங்களில் பல இடங்களிலும் ஒழுக்கு ஏற்படுவதனால் அடியார்கள் பூசைகளில் கலந்து கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். விநாயகர்சஷ்டி விரதம், கந்தசஸ்டி விரதம், மற்றும் திருவெம்பாவை நோன்பு காலங்களில் மிகுந்த சிரமங்கள் ஏற்படுகின்றது.
அத்துடன் உள்வீதி நிலப்பகுதியும் பூச்சகற்றப்பட்டு பொலிவிழந்து காணப்படுகின்றது.



ஆடிவேல் பெருவிழாவினை பொங்கற்திருவிழாவாக கொண்டாடப்படும் கடம்பர முருகன் ஆலயத்தின் தற்போதைய தோற்றம்.

நாகதம்பிரான் ஆலய தற்போதைய தோற்றம்.
ஆலய தீர்த்தக்கேணியின் தற்போதைய தோற்றம்.

ஆலய வெளிப்பிரகார சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் காணப்படுகின்றது. இச்சுவர்களானது உடனடியாக திருத்தப்பட வேண்டியுள்ளது.















Wednesday, January 13, 2016

சித்தன்கேணி பெரியவளவு ஸ்ரீ மஹாகணபதிப் பிள்ளையார் ஆலயம்


இவ்வாலயம் சித்தர்கள் அற்புதங்கள் செய்த தலமாகிய சித்தன்கேணிப் பதியிலே மானிப்பாய் - பொன்னாலை பிரதான வீதியும், அராலி - பண்டத்தரிப்பு பிரதான வீதியும் சந்திக்கும் சந்தியிலே அமையபெற்றிருப்பதுடன் இங்கு நாற்சந்தி நாயகனாக உறையும் எல்லாம்வல்ல மஹாகணபதிப் பிள்ளையார் அனைத்து ஜீவராசிகளினதும் இன்னல்களைக் களைந்து அருள்பாலித்துக் கொண்டிருப்பதுடன் இவ்வாலயம் அடியார்களுக்கு ஓர் நல்வழிகாட்டியாகவும் திகழ்கின்றது.

பதினெட்டாம் நூற்றாண்டு காலப்பகுதியில் வினாயகப்பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பெற்றாலும், விசாலமான கோவில் எம்பெருமான் அருள் கொண்டு 1898 இல் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1912 இலே கும்பாபிசேகம் விமரிசையாக நடைபெற்றது.

பலவித அற்புதங்களைத் தன்னகத்தே கொண்டமைந்த இவ்வாலயமானது 1958 இல் இலங்கையிலேயே முதன்முறையாக 33 ஓம குண்டங்கள் அமைத்து மஹா கும்பாபிசேகம் நடாத்தி வைத்த பெருமை எல்லாம்வல்ல விநாயகப் பெருமானையே சாரும்.

இவ்வாலயத்தில் மூலமூர்த்தியாக விநாயகப்பெருமான் உறைந்து அருள்பாலிப்பதுடன் பரிவார மூர்த்திகளாக கைலாசநாதர் (சிவன்), நித்தியா கல்யாணி (அம்பாள்), வள்ளி தெய்வயானை சமேத முருகப்பெருமான், சனீஸ்வரர், வைரவர், சண்டேஸ்வரர், கடம்பமர முருகன் மற்றும் நாகதம்பிரான் ஆகியோர் அமையப்பெற்று அகிலத்தை காத்து வருகின்றனர்.

இவ்வாலயத்தில் எம்பெருமான் அருள் கொண்டு நித்தியபூசைகள் ஐந்து காலமும் தவறாது நடைபெறுவதுடன் வைகாசி மாதப் பௌர்ணமி தினத்தில் தீர்த்தோற்சவம் நடைபெறும் முகமாக 11 தினங்கள் மகோற்சவப் பெருந்திருவிழாவும் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகின்றது.

இவ்வாலயத்தின் மகாகும்பாபிசேகம் 12 வருடங்களுக்கொருமுறை புனருத்தாரண வேலைகள் இடம்பெற்று நடைபெற்று வருகின்றது.

http://www.thejaffna.com/temples/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D